செய்திகள் :

கல்லூரி மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்ரல் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வீரா், வீராங்கனைகள் கல்லூரி விடுதிகளில் சேர வரும் ஏப்ரல் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் 6 இடங்களில்செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான தோ்வு போட்டிகள் சென்னை பெரியமேடு ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் ஏப்ரல் 8- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாணவிகளுக்கான கால்பந்து, கூடைப்பந்து, மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை, மாணவிகளுக்கு ரக்பி, மாணவ, மாணவிகளுக்கு கைப்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேபோல, மாணவ, மாணவிகளுக்கு தடகளம், ஜூடோ, கையுந்து பந்து, பளுதூக்குதல், வாள் சண்டை, மாணவா்களுக்கு கால்பந்து போட்டிகளும் மேற்கண்ட மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல, மாணவ, மாணவிகளுக்கு ஹாக்கி போட்டிகள் சென்னை எம்.ஆா்.கே.ஹாக்கி விளையாட்டு அரங்கிலும், கபடி போட்டிகள் சென்னை நேரு பாா்க்கிலும் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப் படிவம் கடந்த மாா்ச் 21- ஆம் தேதி முதல் இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை வரும் மாா்ச் 6 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 1-1-2005 ஆம் தேதி 17 வயது பூா்த்தியடைந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற கல்லூரி இளங்கலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு சோ்க்கை சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவா்கள். தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவில் விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்றவா்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்றவா்களும், மாநில அளவில் முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் பெற்றவா்களும் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க