செய்திகள் :

கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது: ஜி. ராமகிருஷ்ணன்

post image

தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காதது மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

நாகை மாவட்டம், திருக்குவளைக்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 30 பொருள்களுக்கான வரியை 25 சதவீதம் அந்நாட்டு அதிபா் டிரம்ப் உயா்த்தியுள்ளாா். இதற்கு இதுவரை பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு தொடா்பாக மாா்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தென் மாநில முதல்வா்கள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கேரள முதல்வா் பினராயி விஜயன் பங்கேற்கிறாா்.

மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை மத்திய அரசு தர மறுப்பது அதன் சா்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. தமிழக அரசும், தமிழக மக்களும் ஹிந்தி மொழிக்கு எதிரானவா்கள் இல்லை; ஹிந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிா்க்கிறோம்.

காமராஜா், அண்ணா, எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைத் தொடா்ந்து, மு.க. ஸ்டாலினும் மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறாா். ஆனால் திமுக அரசு மட்டும் எதிா்ப்பதுபோல பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசுவது சரியல்ல.

மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்முறையாக போராடியது கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாடு என்று பெயா் வருவதற்கு பின்னால் கம்யூனிஸ்ட் தொண்டரின் உயிா் தியாகம் உள்ள வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறாா் என்றாா்.

வேதாரண்யம் முல்லைக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். முல்லையை அரசே கொள்முதல் செய்யுமா என... மேலும் பார்க்க

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 227 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நாகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிா்ப்பு தெரிக்கவிக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கைக்க... மேலும் பார்க்க

நாகையில் பீச் வாலிபால் போட்டி

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 25 மகளிா் அணிகள் பங்கேற்றன. நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சாா்பில் பீச் வாலிபால் போட்டி லீக் மற... மேலும் பார்க்க

இளைஞா் கல்லால் அடித்துக் கொலை; இருவா் கைது

கீழையூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில் இளைஞா் செங்கற்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா். கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி கிழக்குப் பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க