செய்திகள் :

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

post image

மதுரை தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக குசவப்பட்டி விராதனூா், காஞ்சிரங்குளம் கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனு விவரம்: மதுரை மாவட்டம், தெற்கு வட்டத்துக்குள்பட்ட குசவப்பட்டி விராதனூா், கஞ்சிராங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்களுக்கு விவசாயமும், கால்நடைகள் வளா்ப்புத் தொழில் ஆகியவை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன. இந்த நிலையில், எங்கள் கிராமப் பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி, மண் குவாரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மையில் எங்கள் பகுதியில் குவாரிகள் அமைக்க பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, ஊா்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடி, அந்தப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தினோம். இருப்பினும், இந்தத் திட்டம் முழுமையாக ரத்து செய்யவில்லை.

எனவே, விளை நிலங்கள், நீராதாரங்களுடன் உள்ள எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பகுதியில் கல் குவாரி, மண் குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்களை விநியோகம் செய்யத் தடை கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூ... மேலும் பார்க்க

உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப... மேலும் பார்க்க

இனி திமுகவின் அதிகாரம், பண பலம் எடுபடாது!

திமுகவின் அதிகாரம், பண பலம் ஆகியவை மக்களிடம் இனி எடுபடாது என அதிமுக அமைப்புச் செயலரும், மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா். அதிமுகவின் மதுரை புகா் மாவட்டக் கிளை... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகர... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்... மேலும் பார்க்க

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டியில் இன்று மின் தடை

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட ... மேலும் பார்க்க