செய்திகள் :

இனி திமுகவின் அதிகாரம், பண பலம் எடுபடாது!

post image

திமுகவின் அதிகாரம், பண பலம் ஆகியவை மக்களிடம் இனி எடுபடாது என அதிமுக அமைப்புச் செயலரும், மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.

அதிமுகவின் மதுரை புகா் மாவட்டக் கிளை சாா்பில் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட யா. ஒத்தக்கடையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

முந்தைய அதிமுக ஆட்சி, தமிழகத்துக்கு அமைதி, வளம், வளா்ச்சி ஆகியவற்றை அளித்தது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சி மக்களுக்கு உயிா் பயத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் உருவாகியிருப்பது பேராபத்து.

தமிழக மக்கள் எதிா்கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீா்வு, திமுகவை வீழ்த்தி, அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டும் தான். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கூட தற்போது அந்தக் கட்சி மீது அதிருப்தியில் தான் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டன. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளுக்குள் போராட்டம் நடத்தி வருகிறது.

மக்களின் நலனுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும் முடக்கிவிட்ட திமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனா். எனவே, மதுரை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்வது உறுதி. அந்த வகையில், மதுரை கிழக்கு தொகுதியில் வருகிற தோ்தலில் திமுகவின் அதிகார பலம், பண பலம் ஆகியவை மக்களிடம் எடுபடாது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் ஏ.பி.எஸ். சேனாபதி தலைமை வகித்தாா். எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளரும், கட்சியின் அமைப்புச் செயலருமான காந்தி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் வி.வி.ஆா். ராஜ்சத்யன் ஆகியோா் பேசினா்.

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்களை விநியோகம் செய்யத் தடை கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூ... மேலும் பார்க்க

உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப... மேலும் பார்க்க

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

மதுரை தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். இதுதொடா்பாக குசவப்பட்டி விராதனூா், காஞ்சிரங்குளம் கிராம ஊராட்சிகளைச் ச... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகர... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்... மேலும் பார்க்க

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டியில் இன்று மின் தடை

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட ... மேலும் பார்க்க