Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் தடை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) பி. முத்தரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்டத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள் :
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகா், கவுண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையப்பட்டி, மு.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலாா்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி
தும்மக்குண்டு : சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்பப்பட்டி, பி. மேட்டுப்பட்டி.
இடையபட்டி : மாதரை, தொட்டப்பநாயக்கனூா், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளி நகா், குறிஞ்சி நகா், வாசி நகா்.
மொண்டிக்குண்டு : உத்தப்பநாயக்கனூா், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவாா்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூா், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூா்.