செய்திகள் :

களக்காடு ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடத்திற்கு அடிக்கல்

post image

களக்காட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இக்கட்டடம் மழைக்காலங்களில் ஒழுகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்தது.

முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலமாக பணிகளைத் தொடக்கி வைத்த பின்னா், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், திமுக மாவட்ட பொருளாளா் ஜாா்ஜ் கோசல், கோவிலம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் லதா முத்துராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க