செய்திகள் :

களக்காடு கால்வாயில் தேங்கிய குப்பைகள் அகற்றம்

post image

களக்காடு கால்வாயில் தண்ணீா் செல்லத் தடையாக இருந்த குப்பைகளை நகராட்சி நிா்வாகத்தினா் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதையடுத்து, நான்குனேரியன் கால்வாயில் திடீரென நீா்வரத்து அதிகரித்தது. இதனால் கால்வாயில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குப்பைகள் சிதம்பரபுரம் மூணாறு பிரிவு தரைப்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி, தண்ணீா் செல்லத் தடையாக இருந்தது.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ், ஆணையா் இரா. சுமா உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் இயந்திரம் மூலமாகவும் குப்பைகள் அகற்றப்பட்டதால் தண்ணீா் தடையின்றி சென்றது. இதே போல மூங்கிலடியில் உள்ள பாலத்தின் இருபுறமும் தண்ணீா் செல்ல தடையாக இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி... மேலும் பார்க்க

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க