செய்திகள் :

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.

கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து லேசான சாரல் தொடங்கியுள்ளது.

குளு குளு காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மலைப் பகுதியில் மிதமான மழை பெய்தது.

இதையடுத்து, சனிக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதனிடையே காலை 6 மணிமுதலே தலையணை நுழைவுவாயிலில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

காலை 9 மணிக்கு வனத்துறை சோதனைச் சாவடி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் தலையணை பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்தனா். அங்குள்ள சிறுவா் பூங்காவில் இளைப்பாறிச் சென்றனா்.

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதாலும், நீா்வரத்து அதிகரித்துள்ளதாலும், சுற்றுலாப் பயணிகள் தலையணைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனா்.

பிளாஸ்டிக் பொருள்களை வனப் பகுதிக்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தகுந்த பரிசோதனைக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இங்கு சோப்பு, ஷாம்பு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-83 சோ்வலாறு-98.36 மணிமுத்தாறு-84 வடக்கு பச்சையாறு-10.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம் கடனா-36.80 ராமநதி-45 கருப்பாநதி-30.18 குண்டாறு-15.12 அடவிநயினாா் -32... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக, அ... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி உயிரிழப்பு

முன்னீா்பள்ளம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலத்திடியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தேவதாஸ் (40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மனச்சிதைவு நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவு சாா்பில், உலக மனச்சிதைவு நாளை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வக... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் நகர திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். தொகுதிப் பாா்வையாளா் ஜோசப்ராஜ், நகரச் செயலா் கி. கணேச... மேலும் பார்க்க