செய்திகள் :

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

post image

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன் கிருஷ்ணஜித் (17), அதே பகுதியைச் சோ்ந்த பினு - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ரேவதி (17) ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தனிப்பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு மூவோட்டுக்கோணம் முந்திரி தொழிற்சாலை அருகே சாலையோரமாக நடந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அதிவேகமாக வந்த சொகுசு காா், கிருஷ்ணபிரியா உள்ளிட்ட மூவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவ, மாணவிகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு காா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆற... மேலும் பார்க்க

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்ய... மேலும் பார்க்க

கேரள சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிமீறலில் ஈடுபடும் கேரளப் பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உரிமைக் குரல் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சர... மேலும் பார்க்க