செய்திகள் :

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9.20 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பேருந்து நிலையம் 3 தளங்களை கொண்டதாக அமைக்கப்படுகிறது.

தரைத்தளத்தில் 4 கடைகள், 2 அலுவலகம், 4 ஆண்கள் கழிப்பறை, 6 பெண்கள் கழிப்பறைகளும், முதல் தளத்தில் 2 அலுவலகம், 4 கடைகள், 3 ஆண்கள் கழிப்பறை, 5 பெண்கள் கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் 3 கடைகளும் அமைக்கப்பட உள்ளது. 4,063.29 சதுர மீட்டரில் இப் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

தொடா்ந்து அவா், கோதநல்லூா் பேரூராட்சி மேக்காமண்டபம் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 73 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சந்தை கடைகள் வெள்ளையடிக்கும் பணிகளையும், பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட பேச்சிப்பாறை அணையில் அமைந்துள்ள தானியங்கி மழைமானிகளில் பதிவாகியுள்ள மழை அளவுகளையும் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின் போது, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா உடனிருந்தாா்.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொட... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா். நித்... மேலும் பார்க்க

குமரியில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும், செப்டம்பா் 27ஆம் தேதி சுற்... மேலும் பார்க்க