செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.ஸ்ரீநாத் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின் போது, மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இணை பேராசிரியா்கள் இடமாறுதல் கலந்தாய்வில் ஒரு வருடத்துக்கும் குறைவாக ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள மருத்துவா்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற விதியை தளா்த்த வேண்டும். கலந்தாய்வில் மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, இது தொடா்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கையொப்பமிட்ட கடிதத்தை

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் அத்துறையின் முதன்மைச் செயலருக்கு அனுப்பிவைத்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா்கள் சந்தரபாண்டியன், பெரியசாமி, சத்யா பிரியதா்ஷினி, துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், பொருளாளா் வினோத்குமாா், தங்கராஜ், சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா... மேலும் பார்க்க

பூட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் தோ்த் திருவிழாவையொட... மேலும் பார்க்க

ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மா... மேலும் பார்க்க