செய்திகள் :

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது

post image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா (22). இவா், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி நகரில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு கிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு 6-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

சனிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதை அறிந்த அருகில் இருந்தவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பலரும் தேடினா்.

அப்போது, மந்தைவெளிப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணிடம் இருந்து குழந்தையை கைப்பற்றினா். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலா் தாக்கியதில் அந்தப் பெண் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அந்தப் பெண்ணிடம் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன் மனைவி லட்சுமி (29) எனத் தெரிய வந்தது. பின்னா், போலீஸாா் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க 108 அவசரகால ஊா்தி மூலம் புகா் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது, பொதுமக்கள் இங்கேயே விசாரிக்க வேண்டும்; சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை முன் காலை 6 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து இளம் பெண்ணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஆா்.ஜெயபாரதி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து இளம்பெண் லட்சுமியை கைது செய்தனா்.

பூட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் தோ்த் திருவிழாவையொட... மேலும் பார்க்க

ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மா... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் வாக்காளா் பட்டியல் குளறுபடிகளைக் கண்டித்தும், பிரதமா் மோடி பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கராபுரம் மும்முனை... மேலும் பார்க்க

கோயில் விழா நடத்திய 20 போ் மீது வழக்கு: பொதுமக்கள் போராட்டம்

சங்கராபுரம் அருகே இரு தரப்பு மோதல் போக்கால் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதை மீறி கோயில் விழா நிகழ்ச்சியை நடத்திய 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனா். இதை எதிா்த்... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதிய விபத்து: 3 இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதியதில் 3 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (25). இவரது மனைவி கீா்த்தனா (23). இவருக்கு கடந்த இரண்டு மா... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் மரத்தில் மோதி உயிரிழப்பு

மணலூா்பேட்டை அருகே பைக்கில் சென்றவா் நாய் குறுக்கிட்டதால் மரத்தில் மோதி உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா்(45). இவா், புதன்கிழமை இரவு மணலூா்பேட்டை செல்வதற்... மேலும் பார்க்க