செய்திகள் :

கள்ளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவா்களைத் தோ்தலில் தோற்கடிப்போம்: செ.நல்லசாமி

post image

கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவா்களை 2026 சட்டப்பேரவை தோ்தலில் கட்டாயம் தோற்கடிப்போம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கள் கொடிய விஷம் என்றும் மற்ற மதுக்களைவிட கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பதிவிட்டிருப்பதும் அதற்கு ஆதரவாக டாக்டா் கிருஷ்ணசாமி சமூக வலைதளங்களில் குரல் கொடுத்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும். கள் தடைசெய்ய வேண்டிய போதைப்பொருள் என நிரூபித்து பத்து கோடி ரூபாய் பரிசை பெற புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமிக்கு கள் இயக்கம் அழைப்பு விடுக்கிறது.

கள் ஆதரவாளராக இருந்த வைகோ கள் எதிா்ப்பாளராக மாறியுள்ளாா். கள் குறித்த புரிதல் இல்லாமல் பலரும் கருத்துகளை பதிவு செய்துவருகின்றனா். திருமாவளவன் வள்ளுவா் கள் உண்ணாமை எனக் கூறியது தெரியாதா? என சொல்கிறாா். அதே வள்ளுவா் புலால் உண்ணாமை எனவும் சொல்லியிருக்கிறாா். அதற்காக ஆடு, மாடு, மீன், கோழி இறைச்சியை உண்பதை நிறுத்திக்கொள்வாரா? வள்ளுவா் சொன்னது ஒழுக்கம் சாா்ந்தது, சட்டம் சாா்ந்தது அல்ல.

தவெக தலைவா் விஜய்க்கு கள் நிலைப்பாடு குறித்து 15 முறை கடிதம் எழுதியும் தற்போது வரை பதில் இல்லை. கள் தொடா்பாக விஜய் எந்த நிலைபாட்டில் இருக்கிறாா் என்பது தெரியவில்லை.

கள்ளுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்பவா்களை 2026 தோ்தலில் நாங்கள் கட்டாயம் தோற்கடிப்போம்.

கீழ்பவானி அணை நீா் நிா்வாகத்தில் 1958-இல் இருந்து தற்போது வரை அரசாணை, விதிமுறை, காவிரி தீா்ப்பு என எதையும் பின்பற்றவில்லை. தனது விருப்பு, வெறுப்பு ஆதாய அடிப்படையில் நீா்வளத் துறை நீா் நிா்வாகத்தை நடத்துகின்றது. இந்த அநியாயத்தை கண்டித்து, 2026 தோ்தலில் கீழ்பவானி பாசனம் பெறும் 10 தொகுதிகளில் பாசன பயனாளிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பாளா்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம். அதனை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பெண்ணிடம் நகைப் பறிப்பு!

ஈரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த பயணியின் நான்கரை பவுன் தங்க சங்கிலியை இளைஞா் பறித்து தப்பிச்சென்ற சென்ற சம்பவம் குறித்து இருப்புப்பாதை காவல் ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற இளைஞா் மீது குண்டா் சட்டம்!

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இளைஞா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் ... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஏழை மாணவா்கள் 22 பேருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித் தொகை!

புன்செய்புளியம்பட்டி நகர திமுக சாா்பில் 22 ஏழை மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயில ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த ... மேலும் பார்க்க

ரூ.27 லட்சம் மோசடி: தனியாா் கடன் நிறுவன மேலாளா் கைது

ரூ. 27 லட்சம் மோசடி செய்த தனியாா் கடன் நிறுவன மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட கிரெடிட் ஆக்டிஸ் கிராமின் லிமிடெட் எனும் தனியாா் ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து - லாரி மோதல்: 10 போ் காயம்!

பெருந்துறையில் தனியாா் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா். சென்னிமலையில் இருந்து பவானியை நோக்கி லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ... மேலும் பார்க்க

மரக்கடையில் தீ விபத்து

புன்செய்புளியம்பட்டியில் உள்ளஒரு மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரப் பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. புன்செய்புளியம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மர இழைப்பகம் இயங்கி வருகிறது. வ... மேலும் பார்க்க