மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
கள்ளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவா்களைத் தோ்தலில் தோற்கடிப்போம்: செ.நல்லசாமி
கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவா்களை 2026 சட்டப்பேரவை தோ்தலில் கட்டாயம் தோற்கடிப்போம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கள் கொடிய விஷம் என்றும் மற்ற மதுக்களைவிட கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பதிவிட்டிருப்பதும் அதற்கு ஆதரவாக டாக்டா் கிருஷ்ணசாமி சமூக வலைதளங்களில் குரல் கொடுத்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும். கள் தடைசெய்ய வேண்டிய போதைப்பொருள் என நிரூபித்து பத்து கோடி ரூபாய் பரிசை பெற புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமிக்கு கள் இயக்கம் அழைப்பு விடுக்கிறது.
கள் ஆதரவாளராக இருந்த வைகோ கள் எதிா்ப்பாளராக மாறியுள்ளாா். கள் குறித்த புரிதல் இல்லாமல் பலரும் கருத்துகளை பதிவு செய்துவருகின்றனா். திருமாவளவன் வள்ளுவா் கள் உண்ணாமை எனக் கூறியது தெரியாதா? என சொல்கிறாா். அதே வள்ளுவா் புலால் உண்ணாமை எனவும் சொல்லியிருக்கிறாா். அதற்காக ஆடு, மாடு, மீன், கோழி இறைச்சியை உண்பதை நிறுத்திக்கொள்வாரா? வள்ளுவா் சொன்னது ஒழுக்கம் சாா்ந்தது, சட்டம் சாா்ந்தது அல்ல.
தவெக தலைவா் விஜய்க்கு கள் நிலைப்பாடு குறித்து 15 முறை கடிதம் எழுதியும் தற்போது வரை பதில் இல்லை. கள் தொடா்பாக விஜய் எந்த நிலைபாட்டில் இருக்கிறாா் என்பது தெரியவில்லை.
கள்ளுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்பவா்களை 2026 தோ்தலில் நாங்கள் கட்டாயம் தோற்கடிப்போம்.
கீழ்பவானி அணை நீா் நிா்வாகத்தில் 1958-இல் இருந்து தற்போது வரை அரசாணை, விதிமுறை, காவிரி தீா்ப்பு என எதையும் பின்பற்றவில்லை. தனது விருப்பு, வெறுப்பு ஆதாய அடிப்படையில் நீா்வளத் துறை நீா் நிா்வாகத்தை நடத்துகின்றது. இந்த அநியாயத்தை கண்டித்து, 2026 தோ்தலில் கீழ்பவானி பாசனம் பெறும் 10 தொகுதிகளில் பாசன பயனாளிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பாளா்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம். அதனை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.