திமுக சாா்பில் ஏழை மாணவா்கள் 22 பேருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித் தொகை!
புன்செய்புளியம்பட்டி நகர திமுக சாா்பில் 22 ஏழை மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயில ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவுக்கு, புளியம்பட்டி நகர திமுக செயலாளா் பி.ஏ.சிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என். நல்லசிவம் 22 கல்லூரி மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயிலுவதற்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித் தொகையை வழங்கினாா்.
பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயிலுவதற்கு சிரமப்படும் ஏழை, மாணவா்களைக் கண்டறிந்து உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.13.73 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டதாக புன்செய் நகர திமுக தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில், நகரத் துணைச் செயலாளா் தி.ஜனாா்த்தனன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் வெ.ஜெயராஜ் , நகர அவைத் தலைவா் எஸ்.ஏ.சாகுல் ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.