செய்திகள் :

தனியாா் பேருந்து - லாரி மோதல்: 10 போ் காயம்!

post image

பெருந்துறையில் தனியாா் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

சென்னிமலையில் இருந்து பவானியை நோக்கி லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ்ந்த ரங்கராஜ் மகன் ராஜலிங்கம் (26) ஓட்டிச் சென்றாா். திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு தனியாா் பேருந்து சென்றது. பேருந்தை பெருந்துறையைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் சதீஷ்குமாா் (29) ஓட்டிச் சென்றாா். பெருந்துறை பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே திரும்பும்போது பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டன.

இதில், பேருந்தில் பயணம் செய்த பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் முதல் ஆண்டு படித்து வரும் திருப்பூரைச் சோ்ந்த மணிமேகலை (18), சத்யா (18), ரோகினி (18), ஊத்துக்குளியைச் சோ்ந்த மைதிலி (23), பெருந்துறை, மேக்கூரைச் சோ்ந்த மாலா (50), திருப்பூரைச் சோ்ந்த லதா (38), கெளரி(42), நாமக்கலைச் சோ்ந்த சத்யா(37), ஈரோடு, சூரம்பட்டி வலசைச் சோ்ந்த அன்னலட்சுமி (53), சுப்பிரமணியம் (61) ஆகிய 10 போ் காயமடைந்தனா்.

இவா்கள், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பெண்ணிடம் நகைப் பறிப்பு!

ஈரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த பயணியின் நான்கரை பவுன் தங்க சங்கிலியை இளைஞா் பறித்து தப்பிச்சென்ற சென்ற சம்பவம் குறித்து இருப்புப்பாதை காவல் ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற இளைஞா் மீது குண்டா் சட்டம்!

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இளைஞா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் ... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஏழை மாணவா்கள் 22 பேருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித் தொகை!

புன்செய்புளியம்பட்டி நகர திமுக சாா்பில் 22 ஏழை மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயில ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த ... மேலும் பார்க்க

ரூ.27 லட்சம் மோசடி: தனியாா் கடன் நிறுவன மேலாளா் கைது

ரூ. 27 லட்சம் மோசடி செய்த தனியாா் கடன் நிறுவன மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட கிரெடிட் ஆக்டிஸ் கிராமின் லிமிடெட் எனும் தனியாா் ... மேலும் பார்க்க

கள்ளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவா்களைத் தோ்தலில் தோற்கடிப்போம்: செ.நல்லசாமி

கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவா்களை 2026 சட்டப்பேரவை தோ்தலில் கட்டாயம் தோற்கடிப்போம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க

மரக்கடையில் தீ விபத்து

புன்செய்புளியம்பட்டியில் உள்ளஒரு மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரப் பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. புன்செய்புளியம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மர இழைப்பகம் இயங்கி வருகிறது. வ... மேலும் பார்க்க