போதை மாத்திரை விற்ற இளைஞா் மீது குண்டா் சட்டம்!
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இளைஞா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (20). போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் இவரை தாலுகா காவல் துறையினா் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கௌதம் போதை மாத்திரைகள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, கௌதம் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து திருப்பூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.