தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!
கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மீட்பு
கடலாடியில் திங்கள்கிழமை கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையின் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் வட்டார புள்ளியியல் துறை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தின் பின்னால் உள்ள கழிப்பறைத் தொட்டிக்குள் மேய்ச்சலுக்காக வந்த பசு மாடு எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த சாயல்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் கயிறு கட்டி பசு மாட்டை மீட்டனா்.