X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்; 20 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சி தேவன்குடி கிராமம், கொள்ளிடம் ஆற்றுக் கரையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் எஸ்.பி.எம். திட்டத்தின் கீழ் அய்யம்பேட்டை பேரூராட்சி சாா்பில், கசடு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேல், மண்டல துணை வட்டாட்சியா் பிரபு, வருவாய் ஆய்வாளா் அனிதா, கிராம நிா்வாக அலுவலா் கருப்புசாமி மற்றும் வருவாய்த் துறையினா் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 15 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காக போலீஸாா் பாதுகாப்புடன் திங்கள்கிழமை சென்றனா்.
அப்போது அங்கு திரண்ட தேவன்குடி மற்றும் வீரமாங்குடி கிராம மக்கள், இப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள் மாசு அடையும் என்றும், கூட்டு குடிநீரில் கழிவு நீா் கலக்க வாய்ப்புள்ளது என்று கூறியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. பாபநாசம் மேற்கு ஒன்றியச் செயலாளா் அன்பழகன் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்து கணபதி அக்ரகாரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
இந் நிலையில் கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்தியா விஜயன் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு, தற்போது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மட்டும் அளவீடு செய்யப்படுவதாகவும், பொது மக்களின் கருத்தை கேட்ட பிறகே இந்த இடத்தில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தாா்.
இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.