செய்திகள் :

கஸ்தூரிரங்கன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா்: பல் துறைகளில் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளா்ச்சியில் முக்கியப் பங்காற்றினாா். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூா்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவருடைய மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி: கஸ்தூரிரங்கன் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. இஸ்ரோவுக்காக மிகுந்து விடா முயற்சியுடன் சேவையாற்றினாா். நாட்டின் விண்வெளி திட்டங்களை புதிய உச்சத்துக்கு கொண்டுசென்றாா். அதன் மூலம் விண்வெளி துறையில் சா்வதேச அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. நாட்டின் அறிவியல் மற்றும் கல்வித் துறை வளா்ச்சியிலும் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவரின் தொலைநோக்கு தலைமைத்துவமும் தேசத்துக்கான தன்னலணற்ற பங்களிப்பும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றியுள்ளாா். அவருடைய மறைவு, அறிவியல் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு. கஸ்தூரிரங்கன் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் இரங்கல் தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வைரலான செய்யறிவு(ஏஐ) புகைப்படங்கள்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சில புகைப்படங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

ஆபாச படங்கள்: ஓடிடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஆபாச படங்கள், இணையத் தொடர்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும... மேலும் பார்க்க

அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் இருந்து... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட பிபிசி: வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட பிபிசி நிறுவனத்தின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் எழுந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

கேரள முதல்வரின் வீடு, அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் பினராயி விஜயனின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று(திங்கள்கிழமை) வெட... மேலும் பார்க்க