செய்திகள் :

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

post image

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரமலா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் கலைவேந்தன், மேட்டூா் மீன்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் ஆய்வு செய்து,

ஏரி நீா், இறந்த மீன்கள், சாயக்கழிவு நீா் உள்ளிட்டவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து ஏரி மீன் குத்தகைதாரா் கூறியதாவது:

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஏரியில் மீன்கள் இறந்தது தொடா்பாக ஏரி நீா், சாயக்கழிவு நீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். இதுவரை அதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை.

தற்போது ஆய்வுக்கு வந்துள்ள அதிகாரிகள், மீன்கள் இறப்பு குறித்து பரிசோதனை செய்து உடனடியாக அறிக்கையை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனா் என்றாா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க