செய்திகள் :

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் பகுதியில், கோவை-கரூா் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சாலையின் மத்தியில் சென்டா் மீடியன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை தேசிய நெடுஞ்சாலையில், காங்கயத்தை அடுத்துள்ள காடையூா் பகுதியில் தனியாா் பள்ளிக்கு செல்லும் வழி அருகில் சென்டா் மீடியனில் இடைவெளி விட்டு அமைக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், கோரிக்கைக்கு மாறாக தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் , பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடா்பாக மனு கொடுத்து தீா்வு காண அறிவுறுத்தியதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் பத்திர எழுத்தா் அலுவலகம் முன் நிறுத்தி இருந்த செந்தில்குமாா் என்பவரின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினா் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் காளிபாளை... மேலும் பார்க்க