செய்திகள் :

காங்கயம்: திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், திருப்பூா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினாா்.

கூட்டத்துக்கு, திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளருமான நா.தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் ... மேலும் பார்க்க

அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க