செய்திகள் :

காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிந்து தாயும் மகளும் பலி!

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34), நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கருவுற்று இருந்த நிலையில், மகள் கிருபாஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

மணிமேகலையின் தந்தை வீட்டில் தாயும், மகளும் குளித்துக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியில் சென்று தப்பித்து விட்டனர். குளியலறையில் இருந்தவர்கள் விபரம் அறியாது, அதை விட்டு வெளியில் வரும் போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காது பலியாகினர்.

சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணித் தாயும், அவரது மகளும் உயிரிழந்தது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!

A pregnant woman and her daughter, who were caught in a fire caused by a cooking gas leak at their home in the Pillayarpalayam area of Kanchipuram, died on Monday without any treatment.

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

மருத்துவ கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அகில இந்திய கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

மகனுக்காக என் மீது துரோகி பழி சுமத்திய வைகோ: மல்லை சத்யா

சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழியை மதிமுக பொதுச் செயலா் வைகோ சுமத்தியுள்ளாா் என்று மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களின் தொகுப்பூதியத்தில் ரூ. 2,000 உயா்வு

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு ரூ.2,000 கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை பொது மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக... மேலும் பார்க்க

மதுரையில் செப். 4-இல் மாநில மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா். சென்னை வேப்பேரியில் தனியாா் மண்டபத்தி... மேலும் பார்க்க

முறையான பாரமரிப்பு இல்லாததால் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகள்: ராமதாஸ்

சென்னை: ரயில் பாதை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூா் ரயில் ... மேலும் பார்க்க