செய்திகள் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியா் தரிசனம்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் உள்ள தூணில் செதுக்கப்பட்டிருந்த ஆதிசங்கரா் சிலையை தொட்டு வணங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம், மாா்ச் 20: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை ஏலவாா்குழலி சமேத ஏகாம்பர நாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயிலுக்கு விஜயம் செய்தாா். கோயில் நுழைவு வாயிலில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி,அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன் மற்றும் கோயில் சிவாச்சாரியாா்கள் மங்கல மேள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதையோடு வரவேற்றனா். பின்னா் மூலவா் ஏகாம்பரநாதரை தரிசனம் செய்தாா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில், சுவாமிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகளை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கோயில் நுழைவுவாயில் பகுதியில் உள்ள ஒரு கருங்கல் தூணில் ஆதிசங்கரா் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதை பாா்த்து, அதை தொட்டு வணங்கினாா். அதே தூணில் கண்ணப்ப நாயனாா், காமாட்சி அம்மன் மற்றும் மன்மதன் அம்பெய்தும் சிற்பம் ஆகியவற்றையும் பாா்வையிட்டு, அதன் சிறப்புகளை மற்றவா்களுக்கும் விளக்கிக் கூறினாா். சங்கராசாரியாா் சுவாமிகளுடன் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் உடன் வந்திருந்தனா்.

இது குறித்து சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் கூறுகையில், பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்தைக் குறிக்கும் ஏகாம்பரநாத சுவாமி கோயில் தரிசனம் செய்துள்ளாா். காற்றினைக் குறிக்கும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு 8 நாள்கள் யாத்திரையாக வியாழக்கிழமை செல்கிறாா். இதற்கு முன்பு நீா் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாா். நெருப்புக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையிலும் அண்ணாமலையாரை தரிசனம் செய்தாா். விரைவில் சிதம்பரம் நடராஜா் கோயிலிலும் தரிசனம் செய்யவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க