தில்லி குடியிருப்பில் தீ! 7-வது மாடியில் இருந்து குதித்த தந்தை, 2 குழந்தைகள் பலி...
காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 383 மனுக்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)சத்யா, மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சு.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 383 கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.