செய்திகள் :

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய பொருளாதார வளர்ச்சி: யோகி ஆதித்யநாத்!

post image

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியா என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

2014-க்கு முன்பு நாம் பலவீனமான மற்றும் நிலையற்ற பொருளாதாரமாக இருந்தோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது நான்காவது இடத்துக்கு வந்திருப்பதாகப் பலரும் பெருமைப்பட்டனர். உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும்போது இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது, ​​கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரிட்டனை நாம் விஞ்சியுள்ளோம். பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய ஒரே பொருளாதார நாடு இந்தியாதான்.

இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானமும் இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. இந்தியா 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ளது.

வம்ச அரசியல் நாட்டின் சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கிறது. வரலாற்றின் தவறுகளை மீண்டும் செய்வதையும், நமது சுதந்திரத்தை மீண்டும் இழப்பதையும் தவிர்க்க வம்ச அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

2014-க்கு முன்னர் இந்தியா அமைதியை ஆதரித்தது என்ற இயல்பை தற்போது மாற்றியுள்ளோம். நமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டினால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று பஹல்காம் தாக்குதல் மூலம் உணர்த்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

புது தில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆ... மேலும் பார்க்க

அண்டை நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றத்துக்கு மம்தா அரசு உதவி: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

கொல்கத்தா: அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்கள் மேற்கு வங்கத்தில் குடியேற முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு உதவி வருகிறது என்று மத்திய அமைச்சா... மேலும் பார்க்க

தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமா்சனம்

புது தில்லி: இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினாா்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகால மோடி ஆட்சி: ‘நமோ’ செயலி கருத்துப் பகிா்வில் தமிழகம் மூன்றாவது இடம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.ம... மேலும் பார்க்க