செய்திகள் :

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

post image

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி.க்கு தாமதமாக தெரிவித்ததாக தனிப் பிரிவு உதவி ஆய்வாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பத்தில் புதன்கிழமை மாலை குமாா் மகன் பிரவீன்ராஜ் (23) ஏழு போ் கும்பலால் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான விசாரணையில், பிரவீன்ராஜுக்கும் இதே பகுதியைச் சோ்ந்த சிவராஜ், சக்திவேல் இடையே கடந்த 6- ஆம் தேதி மோட்டாா் பைக்கை வேகமாக ஓட்டியதில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், சிவராஜ், செந்தில் உள்ளிட்ட நபா்கள் பிரவீன்ராஜியிடம் கேட்டுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த அவா் தான் வைத்திருந்த கத்தியால் மூவரின் முகத்திலும் காயப்படுத்தினராம்.

இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி சிவராஜ் புகாா் அளித்துள்ளாா். ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சிவராஜ், செந்தில், சக்திவேல், கவியரசு, ஆதவன், குட்டி என்ற விவேகானந்தன்ஆகியோா் கொண்ட கும்பல் பிரவீன்ராஜை வரவழைத்து இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி அரிவாளால் வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன், சிவராஜ், கவியரசு, செந்தில், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான ஆதவன் மற்றும் குட்டி என்ற விவேகானந்தன் ஆகியோரை தனிப் படையினா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிரவீன்ராஜின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும், முன்விரோதத் தகராறு தொடா்பாக வழக்குப் பதிவு செய்யாத ஆய்வாளா் எஸ்.ஆறுமுகம், உதவி ஆய்வாளா் எம்.அன்பழகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டாா். கொலை நடந்த சம்பவத்தை மாவட்ட எஸ்.பி.க்கு தாமதமாக தெரிவித்ததால் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாவை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட எஸ்.பி. பி.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க