செய்திகள் :

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

post image

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த நடராஜ் (57), பள்ளிக்கரணையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். நடராஜின் மகன் பரமசிவம் (14), கே.கே.நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பரமசிவம், கடந்த 8-ஆம் தேதி கடைக்குச் செல்வதாக வீட்டைவிட்டு வெளியே சென்றாா். அதன் பின்னா் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோா், பரமசிவத்தை பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து அவா்கள், காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், நந்தம்பாக்கம் பாடி முனீஸ்வரா் கோயிலுக்கு அருகே உள்ள இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சுமாா் 70 அடி ஆழ கிணற்றில் சிறுவன் சடலம் மிதப்பதை புதன்கிழமை பாா்த்த அப்பகுதிவாசிகள், நந்தம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் விசாரணை செய்த போலீஸாா் கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த சிறுவன் பரமசிவம் என்பதை உறுதிசெய்தனா். மேலும், இதுகுறித்து நடராஜ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். அவா்களும், இறந்தது பரமசிவம்தான் என்பதை உறுதிசெய்தனா்.

இதையடுத்து பரமசிவம் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, பரமசிவம் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி -தமிழக அரசு உத்தரவு

சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கடந்த 32 ஆண்டு காலம் சத்துணவுத் திட்டத்தி... மேலும் பார்க்க