செய்திகள் :

காதலை தெரிவித்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம்..! ரகசியம் பகிர்ந்த டாப்ஸி!

post image

நடிகை டாப்ஸி பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்ததாகக் கூறியுள்ளார்.

டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ என்பவரை காதலித்து மார்ச் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் நடிகை டாப்ஸி.

37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் டாப்ஸி தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.

பாட்மின்டன் திடலில் மலர்ந்த காதல்

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாப்சி திருமணம் குறித்து பேசியதாவது:

நான் அவரை ஒரு பாட்மின்டன் திடலில் பார்த்தேன். நான் பார்வையாளராக இருந்தேன், அவர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அது உள்ளூர் போட்டி. அங்குதான் நான் அவரைச் சந்தித்தேன்.

10 ஆண்டுகளாக அவரைத் தெரியும். தற்போது அவரை 11 ஆண்டுகளாகத் தெரிகிறது. நான் இதை யாரிடமும் மறைத்தது கிடையாது.

அவர் ஒரு கிரிக்கெட் வீரர் அல்லது தொழிலதிபர் அல்லாததால் மக்கள் அது குறித்து பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், எப்போதெல்லாம் அவர் குறித்து கேள்வி கேட்கப்படுகிறதோ நான் அப்போதெல்லாம் பேசியிருக்கிறேன்.

பல பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன்

எனது திருமண வாழ்வு நன்றாக செல்கிறது. அவர் எனக்கு காதலைத் தெரிவித்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன்.

பல திருமணங்கள் இங்கு சரியாக அமையாமல் சென்றிருப்பதை நான் பார்த்துள்ளேன். அதைப் பார்த்து எனக்கும் பயமிருந்தது.

நாங்கள் இருக்கும் தொழில் பல வெற்றி தோல்விகளை சந்திக்கும்படி இருக்கிறது. அதனால் எனது தனிப்பட்ட வாழ்வில் தோல்விகள் அமையாதபடி இருக்க நினைக்கிறேன். அதனால் பல ஒத்திகைகள், பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன் என்றார்.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.23-02-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்இன்று புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்கள... மேலும் பார்க்க

தேசிய சீனியா் கபடி: மகாராஷ்டிரம், ஹரியாணா, சா்வீஸஸ் முன்னேற்றம்

தேசிய சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, சா்வீஸஸ் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் 71-ஆவது தேசிய சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை... மேலும் பார்க்க

கேரளம்: குருவாயூா் கோயிலில் யானை காணிக்கை

கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கிருஷ்ணா் ஆலயத்தில் யானை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காலையில் ‘சீவேலி’ வழிபாடு மற்றும் பூஜைகளுக்குப் பிறகு இந்த காணிக... மேலும் பார்க்க

யுபி வாரியா்ஸ் 177/9

டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யுபிஎல் ஆட்டத்தில் யு பி வாரியா்ஸ் அணி 177/9 ரன்களைக் குவித்தது. இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய யு பி வாரியா்ஸ் அணி ... மேலும் பார்க்க

ஜொ்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிா் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜொ்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 0-4 என ஜொ்மனியிடம் தோற்றிருந்தது இந்தியா. இந்நிலையி... மேலும் பார்க்க

நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?

நடிகர் நானி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டான் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும்... மேலும் பார்க்க