செய்திகள் :

காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

post image

சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பான சில நாள்களில் கூடுதல் நாள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த தொடருக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாக நடிக்கிறார். தலைப்புக்கு ஏற்ப இத்தொடரில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் லப்பர் பந்து படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்த மெளனிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா இத்தொடரை தயாரிக்கிறது. இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையிலான தலைப்பில் இரு காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தொடர், ஒளிபரப்பான சில நாள்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், சனிக்கிழமையும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க | சோனியா அகர்வால் வருகை.... விறுவிறுப்படையும் கயல் தொடர்!

Kalaignar TV Kaathuvaakkula Rendu Kaadhal serial telecasting time

மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அ... மேலும் பார்க்க

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

கூலி படத்தில் பிரபலமான மோனிகா பாடல் நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு பிடித்துள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் பான் இந்திய நடி... மேலும் பார்க்க

கூலி பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒரு நாளுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த... மேலும் பார்க்க

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க