செய்திகள் :

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

post image

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் உள்ளிட்டோரின் வீடுகள் என அனைத்தும் தீக்கிரையாகின.

இளைஞர்களின் கலவரத்தை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் காத்மாண்டு விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்டதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்த இந்திய விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. தொடர்ந்து விமான நிலையத்தை புதன்கிழமை மாலை 6 மணிவரை மூடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேபாளத்தில் நிலைமை முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், பயணிகளும் பாதுகாப்பு கருதி மறுஅறிவிப்பு வரும்வரை விமான நிலையத்தை மூடுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரத்து செய்தது.

இந்த நிலையில், நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க விடுதி உரிமையாளர்களுக்கு நேபாள ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரை அணுகவும் அல்லது 9851031495 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் நேபாள ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

Kathmandu airport closed without further notice

இதையும் படிக்க : நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு ந... மேலும் பார்க்க

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை- அதிபரின் ஆலோசகா்

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பைவிட இந்தியாவை கடுமையா... மேலும் பார்க்க

நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் 2 நாள்களாக தீவிரப் போராட்... மேலும் பார்க்க

நேபாளத்தில் இடைக்கால அரசு? தலைவரை நியமிக்க மூவா் பெயா் பரிசீலனை

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க