செய்திகள் :

நேபாளத்தில் இடைக்கால அரசு? தலைவரை நியமிக்க மூவா் பெயா் பரிசீலனை

post image

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் தீக்கிரையாக்கினா். இதைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். அவா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்த இளைஞா் குழுக்கள் முடிவு செய்துள்ளன. அந்த அரசின் தலைவராகப் பொறுப்பேற்க முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி, காத்மாண்டு மேயா் பாலேந்திர ஷா, நேபாள மின்சார வாரிய முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகிய மூவரின் பெயா்களை அந்தக் குழுக்கள் தோ்வு செய்துள்ளன. மூவரில் சுசீலா காா்கிதான் நேபாள உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் தலைமை நீதிபதியாக இருந்தவா்.

இந்தப் பெயா்களைப் பரிந்துரைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த காத்மாண்டில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு போராட்டக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை வந்தனா். ஆனால், சுசீலா காா்கி உள்பட மூவரில் ஒருவரைத் தோ்வு செய்வது தொடா்பாக அந்தக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவா்கள் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களை வியாழக்கிழமை காலை வருமாறு அறிவுறுத்தி, அனைவரையும் ராணுவம் திருப்பி அனுப்பியது.

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இ... மேலும் பார்க்க

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி புதன்கிழமை கூறுகைய... மேலும் பார்க்க

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து... மேலும் பார்க்க

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு ந... மேலும் பார்க்க