செய்திகள் :

காந்தி நகரில் பிரதமர் மோடி வாகனப் பேரணி!

post image

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். தில்லியில் இருந்து தனி விமானத்தில் வதோதரா விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்ற பிரதமா் மோடி, அங்கிருந்து வதோதரா புறநகரில் உள்ள விமானப் படை நிலையம் வரை வாகனப் பேரணியில் பங்கேற்றாா்.

விமானப் படை நிலையத்திலிருந்து தாஹோத் நகருக்கு சென்ற மோடி, ரயில்வே என்ஜின் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்து பார்வையிட்டார். அகமதாபாத்-வேராவல் வந்தே பாரத் ரயில், வல்சாத்-தாஹோத் விரைவு ரயிலையும் அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தாஹோத் மற்றும் புஜ் நகரில் அடுத்தடுத்து பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு காந்திநகர் சென்றார்.

இந்த நிலையில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திா் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்ற மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

வாகனப் பேரணியில் பிரதமருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் கலந்துகொண்டுள்ளார்.

இதையும் படிக்க : ரூ. 25 லட்சம் இழப்புக்கு ரூ. 10,000 உதவித்தொகை! ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிருப்தி!

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க