செய்திகள் :

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

post image

மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாளான இன்று ’காந்தி ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், காந்தி ஜெயந்தி குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”காந்தி ஜெயந்தி என்பது, மனித வரலாற்றின் போக்கை மாற்றியவரின் அசாதாரண வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவதாகும். தைரியமும் எளிமையும் பெரும் மாற்றத்திற்கு கருவிகளாக மாற முடியும் என்பதை அவர் காட்டினார்.

சேவையும் இரக்கமும் மக்களை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான வழிகளாக உள்ளன என்று அவர் நம்பினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் எங்கள் பயணத்தில் அவரது பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Let's keep to follow Gandhi's path! Modi

இதையும் படிக்க : காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சர்வதேச எல்லையான ‘சர் க்ரீக்’ பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்ப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால், அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆப் ஸ்டோரில் களமிறக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலி, அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்... மேலும் பார்க்க

ஸுபின் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! ஸ்கூபா டைவிங் போது இறக்கவில்லை!!

அசாம் இசைக் கலைஞர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூரில் மரணமடைந்த நிலையில், அவர் ஸ்கூபா டைவின் செய்தபோது மரணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ம... மேலும் பார்க்க

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ம... மேலும் பார்க்க

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டுள்ளார்.கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்ப... மேலும் பார்க்க

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையடுத்... மேலும் பார்க்க