செய்திகள் :

ஸுபின் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! ஸ்கூபா டைவிங் போது இறக்கவில்லை!!

post image

அசாம் இசைக் கலைஞர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூரில் மரணமடைந்த நிலையில், அவர் ஸ்கூபா டைவின் செய்தபோது மரணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் மிகப் பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அசாமைச் சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க்.

இவர் கடந்த மாதம் சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, அங்கு ஸ்கூபா டைவிங் செய்ததாகவும், அப்போது அவர் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் அங்கு தண்ணீரில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோதுதான் மரணமடைந்ததாக தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்க்கின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் உடல் கூராய்வு அறிக்கையின் நகலை இந்திய அரசுக்கு, சிங்கப்பூர் காவல்துறை வழங்கியிருக்கிறது.

கடந்த செப்.19-ஆம் தேதி சிங்கப்பூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது ஸ்கூபா டைவிங் செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் காவல்துறையும், 52 வயதான கார்க்கின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றுதான் தெரிவித்திருந்தது.

மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அளித்திருக்கும் அறிக்கையில், கர்க் மரண விவகாரத்தில் அவரது உடலை கூராய்வு செய்த அதிகாரியால், அவர் நீரில் மூழ்குவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை வெளிப்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியின் விசாரணையின் மூலம் இறந்தவரின் அடையாளம், மரணம் எப்படி, எப்போது, ​​எங்கு நடந்தது என்பதைக் கண்டறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த வழக்கில், மர்ம மரணம் என்ற சொல்லுக்கு அடிப்படை இல்லை என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கை, கர்க் கொலை செய்யப்பட்டார் அல்லது சில குற்றவியல் சம்பவங்கள் விளைவாக இறந்தார் என்று சந்தேகிக்கவில்லை என்று குறிப்பிடுகிறது.

செப்.19ஆம் தேதி, செயின்ட் ஜான்ஸ் தீவுப் பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு கர்க் அழைத்துச் செல்லப்பட்டார். நினைவிழந்த நிலையில் தான், அவர் தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

While Assamese musician Zubin Garg died in Singapore last month, informed sources say that he did not die while scuba diving.

இதையும் படிக்க... இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சர்வதேச எல்லையான ‘சர் க்ரீக்’ பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்ப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால், அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆப் ஸ்டோரில் களமிறக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலி, அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்... மேலும் பார்க்க

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ம... மேலும் பார்க்க

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாளான இன்று ’காந்தி ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றத... மேலும் பார்க்க

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டுள்ளார்.கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்ப... மேலும் பார்க்க

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையடுத்... மேலும் பார்க்க