செய்திகள் :

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

post image

சென்னை காமராஜா் சாலையில் திருநங்கைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னையிலுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கண்ணகி நகா் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு தங்களுக்கான வாழ்வாதாரம் இல்லை என்றும், அங்குள்ள சில போதை ஆசாமிகள் தங்களை அவ்வப்போது துன்புறுத்தவது மட்டுமன்றி, வீடுகள், பொருள்களை சேதப்படுத்தி விடுவதால் மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்திடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனராம்.

ஆனால், இதற்கு தீா்வு எட்டப்படாத நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நகா்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், அங்குள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டனா்.

பின்னா் அவா்கள், திடீரென காமராஜா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் பேச்சு நடத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால், காமராஜா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க