செய்திகள் :

காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்; மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஆல்ரவுண்டர்!

post image

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

மும்பை அணியில் கார்பின் போஸ்ச்

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், மும்பை அணியிலிருந்து முழங்கால் காயம் காரணமாக விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் அணியில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதாகும் கார்பின் போஸ்ச் இதுவரை 86 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் மும்பை கேப் டவுன் அணிக்காக விளையாடியுள்ளபோதிலும், இதுவரை அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை. முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார்.

இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற மார்ச் 23 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது. மே.இந்திய தீவுகள் மாஸ்டா்ஸ் அணியை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றன... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்ற... மேலும் பார்க்க

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க