செய்திகள் :

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

post image

கடந்த வாரம் மதுரை வந்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களை பார்வையிட்டார்.

இதற்காக, அவர் மதுரையிலியிருந்து சிவகங்கைக்கு காரில் புறப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஏற்ற மறுத்ததாக விடியோக்கள் வெளியாகியிருந்தன.

சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்களில், எடப்பாடி பழனிசாமி, முன் இருக்கையில் அமர்ந்திருந்த காரில், செல்லூர் ராஜூ ஏறுவதற்குத் தயாரானார். ஆனால் அதனைப் பார்த்த பழனிசாமி, வேண்டாம் வேண்டாம், வேறு காரில் செல்லுங்கள் என்று கூறினார்.

இந்த விடியோ வைரலாகி, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பழனிசாமி, செல்லூர் ராஜூவை தன்னுடைய காரில் ஏற்ற மறுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், உண்மை அவ்வாறு இல்லை என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாக செல்லூர் ராஜு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய் பிரிவில் இருந்து இசட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்துள்ள காரணத்தால், எடப்பாடி பழனிசாமி இருந்த காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால்தான், தன்னை காரில் ஏற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். வேறு காரில் வருமாறும் கூறியதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால்தான் தன்னை காரில் ஏற்றவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தம்மம்பட்டி சிவன் கோவிலில் பெண்கள் பங்கேற்ற கோபூஜை!

தம்மம்பட்டி சிவன்கோவிலில் 200 பெண்கள் பங்கேற்ற கோபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் மற்றும... மேலும் பார்க்க

வரும் 13ஆ தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ... மேலும் பார்க்க

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதனருக... மேலும் பார்க்க

உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது: ராமதாஸ் கடிதம்

சென்னை: அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதி நேரில் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது என ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா! ஆக.15க்குள் பெறுவது எப்படி? முழு விவரம்

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிக் கட்டணங்களை செலுத்த கொண்டு வரப்பட்ட ஃபாஸ்டேக் முறையில் ஆக.15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலை மற்றும்... மேலும் பார்க்க

நீதிபதி அறைக்கு நேரில் வரச் சொன்னது ஏன்? அன்புமணி வழக்குரைஞர் பாலு விளக்கம்

சென்னை: பாமக பொதுக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வழக்கில், ராமதாஸ், அன்புமணி இருவரும் அறைக்கு நேரில் வருமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தது ஏன் என்பது குறித்த... மேலும் பார்க்க