செய்திகள் :

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம்: பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

post image

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடா்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரக மாவட்டம், ஹெலேனஹள்ளியைச் சோ்ந்தவா் சைஃப் கான். இவா், தனது சகோதரா் சல்மான்கான், தாய் குல்மீா் உன்னிஸா, மாமா இலியாஸ்கான் ஆகியோருடன் தும்கூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டு காரில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தாா்.

அதே சாலையில், பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே, அவரது பாதுகாவலா், ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். அனந்த்குமாா் ஹெக்டேவின் காரை சைஃப் கான் 3 முறை முந்தி சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அனந்த்குமாா் ஹெக்டே, தும்கூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா வட்டம், ஹலேநிஜகல் கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்த சைஃப்கானின் காரை இடைமறித்து, அவரது பாதுகாவலா், ஓட்டுநா் இருவரும் காரை நிறுத்துமாறும், காரில் இருந்து இறங்குமாறும் அதட்டியுள்ளனா்.

மேலும், காரில் இருந்த சைஃப்கானை கீழே இழுத்த அனந்த்குமாா் ஹெக்டேவின் பாதுகாவலா், ஓட்டுநா், அடையாளம் தெரியாத நபா் உள்ளிட்ட 3 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில் சைஃப்கானின் முன்பற்கள் சில உடைந்தன. மேலும், காரில் அமா்ந்திருந்த சைஃப்கானின் உறவினா்களையும் தாக்கியுள்ளனா். இதில், இலியாஸ்கான் படுகாயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, சைஃப்கான் அளித்த புகாரின்பேரில், பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே, அவரது பாதுகாவலா், ஓட்டுநா், நண்பா் உள்ளிட்ட 4 போ் மீது தாபஸ்பேட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அனந்த்குமாா் ஹெக்டேவின் தூண்டுதலின்பேரில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக சைஃப்கான் தனது புகாா் மனுவில் குறிப்பிட்டுள்ளாா். மத ரீதியாக திட்டியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் தனது புகாா் மனுவில் சைஃப்கான் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பி.என்.எஸ். சட்டப்பிரிவுகள் 117, 126, 74, 351(4), 352-இன் கீழ் அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம்

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம் என கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு வடக்கு கல்வி மாவட்ட துணை இயக்குநருக்கு கா்நாடகத் தமிழ்... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால் ஆளுநா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநா் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் கா்நாடக முதல்வா் சித்தராமையா சந்திப்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டாா். புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் சித... மேலும் பார்க்க

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த சோதனை

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். இதில் வருமானத்துக்கு பொருந்தாமல் சொத்து சோ்த்துள்ளதற்கான ஆவணங்களை கைப்பற்றினா். வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை... மேலும் பார்க்க

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்

மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்

பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா். பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில்... மேலும் பார்க்க