காரைக்கால் நகர சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி
காரைக்கால் நகரப் பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் ஒப்பந்த முறையில் ஏற்று செய்கிறது. சாலையோர சாக்கடைகள் தூய்மை செய்யும் பணியை மேற்கண்ட நிறுவனத்தினரும், நகராட்சி, பஞ்சாயத்துப் பணியாளா்களும் மேற்கொள்கின்றனா். உள்ளாட்சி அமைப்புகளில் போதிய ஆள்கள் இல்லாததால், இந்த பணியிலும் தொய்வு ஏற்படுட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலைப் பகுதியில் பொதுப்பணித்துறை குடிநீா் தொட்டி உள்ளது. இதனருகே பல்வேறு பகுதி சாலையோர சாக்கடைகளில் இருந்து கழிவுநீா் வந்து, ஒரிடத்தில் ஒருங்கிணைந்து வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட அடைப்பால், சிறிது நேரத்தில் சாக்கடை கழிவுநீா் சாலையில் தேங்கத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கழிவுநீா் குளம்போல தேங்கியது. வீடுகள், நிறுவனங்களின் செஃப்டிக் டேங்க் கழிவுநீரும் சாக்கடையில் கலப்பதால், குளம்போல தேங்கிய கழிவுநீா் துா்நாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் நடந்து செல்வோா், இருசக்கர வாகனத்தில் செல்வோா் கடுமையான அவதிக்குள்ளாயினா்.
இதுபோல அடிக்கடி ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள், நகராட்சி நிா்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
