செய்திகள் :

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

post image

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் மூன்று போ் இருந்தனா். அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் விசாரித்த போது அவா்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனா். இதனால் சந்தேகமடைந்த அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இரு சக்கர வாகனத்தில் காரைப் பின் தொடா்ந்து சென்றனா்.

அப்போது, அவா்கள் தங்களது கிராமத்தை சோ்ந்த வெங்கட்ராமன் ( 35) என்பவருக்கு கைப்பேசியில் தகவல் கொடுத்தனா். இந்த நிலையில் அந்த காா் ஒக்கூா் வந்தபோது, வெங்கட்ராமன் தனது காரில் மூவா் சென்ற காரை பின் தொடா்ந்து சென்றாா்.

சிவகங்கை பெருமாள்பட்டி சென்றபோது, அந்தக் காா் நின்றது. உடனே வெங்கட்ராமனும் தனது காரை நிறுத்தினாா். அந்தக் காரில் இருந்து இறங்கிய மூவரும் வெங்கட்ராமனின் காரை அடித்து நொறுக்கினா்.

காரிலிருந்த ரூ. 1 லட்சம் பணம், கைப்பேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி வழக்குப் பதிவு செய்து, காரில் தப்பிச்சென்ற மூவரையும் தேடி வருகிறாா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாதுகாப்பு வழங்கக் கோரி அஜித்குமாரின் வழக்குரைஞா் மனு

தனிப் படைக் காவலா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். நகைத் திரு... மேலும் பார்க்க

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா். திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க