செய்திகள் :

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி- ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு

post image

கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கார் ஓட்டுநர் ரமண ரெட்டியையும் கைது செய்துள்ளனர். பலியானவரின் மனைவி சீலி லுர்து மேரி உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆந்திரம் மாநிலம், சட்டெனப்பள்ளி தொகுதிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி வருகை தந்திருந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சட்டெனப்பள்ளி தொகுதிக்குள்பட்ட தடேப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ரெண்டேப்பல்லாவுக்கு பேரணியாக காரில் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகப்படுத்தினர்.

இந்தநிலையில், சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தராக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் சென்று கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் விழுந்ததை கவனிக்காத ஓட்டுநரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தாததால், காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.

அதில் அவர் உடல் நசுங்கி பலியானார். பலியான நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாசமாக எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட... மேலும் பார்க்க

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க

பஞ்சாப்: லூதியானா மேற்கு தொகுதியைத் தக்கவைத்த ஆம் ஆத்மி!

பஞ்சாபின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோராவின் நெருங்கிய போட்டியாளரான காங்... மேலும் பார்க்க

குஜராத் இடைத்தேர்தல்: பாஜக - 1; ஆம் ஆத்மி - 1 வெற்றி!

குஜராத்தில் இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் காதி மற்றும் விசாவதர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஜனவரி 19... மேலும் பார்க்க