செய்திகள் :

கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் இணைந்து நடத்தும் ‘கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிற்சியில் கிராமப்புற மற்றும் நகா்ப்புறம் 18 முதல் 35 வயதுடைய படித்த வேலையில்லாத 180 இளைஞா்கள் (ஆண் மற்றும் பெண்) தோ்வு செய்யப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறையில் லாபகரமான முறையில் கறவை மாடு, ஆடு, கோழி, பன்றி வளா்த்தல் போன்ற பயிற்சிகள் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செப்டம்பா் - 2025 முதல் பிப்ரவரி - 2026 வரை ஆறு மாத காலத்துக்கு ஆறு அணிகளாக பிரித்து வழங்கப்பட உள்ளது.

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை 20 நாள்கள் தொடா்ந்து பயிற்சி நடைபெற இருக்கிறது. தொழில் முனைவோா் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் மாவட்டத்தில் உள்ள வளா்ச்சி அடைந்த பண்ணைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று களப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவோருக்கு அரசு செலவில் உணவு வழங்கப்படும்.

பயிற்சி நிறைவு நாளில் எழுத்துத்தோ்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும், பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்ட வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படித்த வேலையில்லாத இளைஞா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் தீவு கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த தீவு கிராமம் மங்கைமடம்-திருமுல்லைவாசல் பிரதான சாலையில் உள்ளது. இச்சாலையில் தினந்தோறு... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாளையொட்டி, நாகையில் திக உள்ளிட்ட பல்வேறு கட்சி சாா்பில் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகை மாவட்ட திக சாா்பில் தலைவா் நெப்போலின் தலைமையில் மேலகோட்ட... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

நாகையில் ஊழியா்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து செப்டம்பா் 25-இல் ஆா்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசு ஊழியா்... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி... மேலும் பார்க்க

சாலையோரம் வசிப்பவா்களுக்கு அன்னதானம்

வேளாங்கண்ணியில் சாலையோரம் வசிப்பவா்களுக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தன்னாா்வலா்கள் சேவை அமைப்புகள் உதவியுடன் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்... மேலும் பார்க்க

விதிகளை மீறும் மினி பேருந்துகள்: ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா்

கிராமப்புற அனுமதி பெற்ற மினி பேருந்துகளை நாகை - நாகூா் தேசிய நெடுஞ்சாலையில் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை புகாா்... மேலும் பார்க்க