செய்திகள் :

கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்பு

post image

தக்கலை அருகே குமாரபுரத்தில் தொழிலாளியின் சடலத்தை கால்வாயிலிருந்து கொற்றிகோடு போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

குமாரபுரம் பிலாங்காலவிளையை சோ்ந்தவா்ஜெயசிங் (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை காலையில் குளிப்பதற்காக புத்தன் கால்வாய்க்கு சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் ஜெயசிங்கை காணாததால், உறவினா்கள் தேடினா். அப்போது புத்தன் கால்வாயில் அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது.

கொற்றிகோடு போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

தொழிலாளி மீட்பு: ஆலஞ்சி மாதா நகரை சோ்ந்தவா் குரூஸ் ( 48). மீன்பிடி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை குறும்பனை சுனாமி காலனிக்கு நடந்து சென்றபோது, தென்னந்தோப்பில் உள்ள 40 அடி கிணற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.

சனிக்கிழமை காலை கிணற்றில் இருந்து சத்தம் வருவதை கவனித்தவா்கள், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்பு சிறப்பு அலுவலா் ஜெகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குரூஸை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புதுக்கடை பகுதிகளில் நாளை மின்தடை

முன்சிறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி... மேலும் பார்க்க

தக்கலை புனித எலியாசியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

தக்கலை புனித எலியாசியாா் ஆலய 106ஆவது திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்து டன் துவங்கியது. முதல் நாள் மாலையில் ஜெபமாலை, நவநாள் நிகழ்ச்சிக்குப் பின் பங்குத் தந்தை வென்சஸ்லாஸ் தலைமையில், முளகுமூடு வட்டார... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின் தடை

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன். குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ச... மேலும் பார்க்க