காவலருக்கு மிரட்டல்: இருவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலரை மிரட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தேனி - பெரியகுளம் புறவழிச் சாலையில் டி.கள்ளிப்பட்டி பிரிவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியைச் சோ்ந்த ராமா் (24), தா்மராஜ் (46) ஆகிய இருவரும் காவலா்களிடம் தகராறு செய்துவிட்டு, தப்பியோடி விட்டனராம்.
இது குறித்து உதவி ஆய்வாளா் இளங்கோ கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமா், தா்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.