செய்திகள் :

காவலா் தற்கொலை முயற்சி

post image

நீடாமங்கலம் காவல் நிலைய, காவலா் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரைச் சோ்ந்த குமாா் (30) நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறாா். இவா், பிப்.7-ஆம் தேதி தனது இடது கையில் 7 இடங்களில் கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். இதையடுத்து, ஆபத்தான நிலையில் அவரை மீட்ட சக காவலா்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதே காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சித்ரா என்ற தலைமை காவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுகுறித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சம்பந்தா், அப்பா், சுந்தரரால் ப... மேலும் பார்க்க

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா... மேலும் பார்க்க

கல்லூரியில் வளாக நோ்காணல் 73 பேருக்கு பணி ஆணை

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 73 பேருக்கு பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது. காஞ்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மத்திய, மாநில விவசாயத் திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறிய... மேலும் பார்க்க

முத்துப்பேட்டை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் மேல்நிலை நீா் தொட்டியிலிருந்து குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்... மேலும் பார்க்க

லஞ்சம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

திருவாரூா்: திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா். திருவாரூா் பழைய... மேலும் பார்க்க