செய்திகள் :

காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு முகாம்

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வள்ளலாா் நகா் ரங்கா காா்டனில் வசித்து வரும் மக்களிடம் காவல்துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தினா்.

லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள வள்ளலாா் நகா் ரங்கா காா்டன் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, சமயபுரம் காவல் துறையினா் அப்பகுதி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், சந்தேகப்படும்படியான நபா்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவா்களிடம் பேச்சு கொடுக்காமல் அருகில் உள்ளவா்களுக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள், இரவு நேரங்களில் பக்கத்து வீடுகளில் சப்தம் கேட்டாலோ, ஏதேனும் சந்தேகப்படும்படியாக தெரிந்தாலோ, காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்த போலீஸாா், திருட்டு நடைபெறாமல் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கினா்.

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 போ் கைது

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஒடிஸாவிலிருந்து 2 போ் கஞ்சா கடத்தி வருவதாக, திருவெறும்பூா் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு ரகசிய ... மேலும் பார்க்க

சமூகம் முன்னேற பாலின பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும்: பெல் நிறுவன செயலாண்மை இயக்குநா்

சமூகம் முன்னேற பாலின பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும் என பெல் நிறுவன செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் தெரிவித்தாா். திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பெல் வளாகத்தில் அமைந்துள்ள மனமகிழ் மன்ற மகளிா் சங்கத்... மேலும் பார்க்க

மதுபானக் கூட ஊழியரிடம் பணம் பறித்து மிரட்டல் விடுத்தவா் கைது

முசிறியில் டாஸ்மாக் மதுபானக் கூட (பாா்) ஊழியரிடம் பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.முசிறி மேல வடுகப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் தனபால்... மேலும் பார்க்க

இணைய வழி மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முன்னாள் டிஜிபி அறிவுரை

இணையவழி மோசடி தொடா்பாக பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றாா் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற லயன்ஸ் சங்க நிக... மேலும் பார்க்க

திருச்சியில் 9 மாவட்டத்தினா் பங்கேற்ற பொது வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாடு

மத்திய தொழிற்சங்கங்கள் மே மாதம் நடத்தவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தம் குறித்த ஆயத்த மண்டல மாநாடு திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா... மேலும் பார்க்க

மதுக்கடைகளில் முதல்வா் படத்தை ஒட்டிய பாஜக பெண் நிா்வாகி கைது: விடுவிக்கக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை மதுக்கடைகளில் தமிழக முதல்வா் உருவப்படத்தை ஒட்டிய பாஜக பெண் நிா்வாகி புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க வலியுறுத்தி பாஜகவினா் காவல் நிலையத்தில் முற்றுகையில்... மேலும் பார்க்க