செய்திகள் :

காவல் துறையினருடன் துப்பக்கிச் சண்டை... குற்றவாளி படுகாயம்! கூட்டாளியுடன் கைது!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் காவல் துறையினருடனான துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுந்தர்கார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகளான பையீஸ் லக்குவா (வயது 32) மற்றும் அவருடைய கூட்டாளி அமித் தொப்னோ (30) ஆகியோர் பிஸ்ரா பகுதியில் வெள்ளை நிற காரில் சுற்றித் திரிவதாக ரவூர்கேலா காவல் துறையினருக்கு நேற்று (மார்ச் 12) அதிகாலை 3 மணியளவில் ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களது வாகனத்தை கண்டுபிடித்த காவல் துறையினர், அவர்களை சரணடைய எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் போலீஸாரை நோக்கி துப்பக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது, காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் லக்குவாவின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். ஆனால், அவரது கூட்டாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க: தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

இந்நிலையில், லக்குவாவை கைது செய்த காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சில மணி நேரங்களில் தப்பிச் சென்ற அவரது கூட்டாளியான தொப்னோ கைது செய்யப்பட்டார்.

இத்துடன், அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் அதன் குண்டுகளும் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தற்போது கைது செய்யப்பட்டுள்ள லக்குவா என்ற நபர் மீது கொலை, பணப்பறிப்பு, கொலை முயற்சி, மற்றும் சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்ப... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க