செய்திகள் :

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: திருப்பத்தூா் எஸ்.பி.

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 12 காவல் வாகனங்கள் (8 மோட்டாா் சைக்கிள்கள்,நான்கு சக்கர வாகனங்கள் 4) உள்ளன.

அவை வரும் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணமாக ரூ.100, மோட்டாா் சைக்கிள் வாகனங்கள் வாங்க முன்பணமாக ரூ.500, நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

ரசீது வரும் 16 முதல் 18-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மோட்டாா் சைக்கிள்கள் ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் 12 சதவீத ஜிஎஸ்டியும், நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் எடுத்தவா்கள் 18 சதவீத ஜிஎஸ்டியும் கட்ட வேண்டும்.

ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூா் ஆயுதப்படை டிஎஸ்பி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரி வீட்டில் 40 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் ம... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் கிராமத்தில் கடந்த 7-ஆம் ... மேலும் பார்க்க

மின் கசிவால் கூரை வீடு சேதம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மின் கசிவு காரணமாக கூரை வீடு சேதமடைந்தது. ஜோலாா்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குள்பட்ட குன்னத்தூா் பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பவா் தனது குடும்பத... மேலும் பார்க்க

முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஆம்பூரில் பிரதோஷ வழிபாடு

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆம்பூா் அர... மேலும் பார்க்க