செய்திகள் :

காவல் துறையைக் கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தில் முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் மனு

post image

காங்கயத்தில் கைப்பேசியை ப் பறித்து மிரட்டிய போலீஸாரைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

இது குறித்து அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவை நிறுவனத் தலைவருமான பசும்பொன் பாலு மற்றும் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காங்கயம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) சென்றிருந்தோம். சாப்பிடும் முன்பே காங்கயம் காவல் ஆய்வாளா் செல்வநாயகம், எனது 2 கைப்பேசிகளையும் பறித்து ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டாா். நான் அவரிடம் கேட்டபோது தரமுடியாது காவல் நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளவும் எனக் கூறி விட்டாா். அதன் பிறகு காவல் நிலையம் சென்றபோதும், அவா்கள் கைப்பேசியை தராமல் அலைக்கழித்தனா்.

பின்னா் உதவி ஆய்வாளரிடம் எனது கைப்பேசியை கொடுத்து அவா்களிடம் இனி இந்தப் பகுதிக்கே வரக்கூடாது என எழுதி வாங்குமாறு கூறினாா். அதற்கு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டபோது, அதிகம் பேசினால் வழக்குப் பதிவு செய்து என்னை சிறையில் அடைப்பதாகக் கூறி என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டாா். இந்த சம்பவத்தில் என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டனா்.

அதனால், அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் , காவல் துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வரும் ஜூலை 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜெய் சாரதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி

வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியை பள்ளியின் தாளாளா் ஈ.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்... மேலும் பார்க்க

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி முதல் காலாண்டில் 11.7 சதவீதம் உயா்வு: ஆ.சக்திவேல்

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.7 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் தெரிவித்தாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், அங்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ

முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பக... மேலும் பார்க்க

அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அவிநாசி நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க